புயல்வண்ணன் பொற்பதுமப் போதிற் புவனச் செயல்வண்ணங்
காட்டிய சேயோன் - உயிரனைத்தும்
| 1 |
காட்டும் பதின்மரினுங் காசிப னேழ்புரவி பூட்டுந் தனியாழிப்
பொற்றேரோன் - ஓட்டி
| 2 |
அறவாழி மைந்தன்மே லூர்ந்தோ னவனி புறவாழி முட்டப் புரந்தோன் -
மறையோற்குப்
| 3 |
பூவிற் கிழத்தியையும் பூமிக் கிழத்தியையும் நாவிற் பழுதஞ்சி
நல்கினோன் - வாவியிற்
| 4 |
புக்க துறையிற் பகைப்புலியும் புல்வாயும் ஒக்க வொருகாலத்
தூட்டினோன் - புக்கால்
| 5 |
மறானிறை யென்று சரணடைந்த வஞ்சப் புறாநினை புக்க புகழோன் -
அறாநீர்த்
| 6 |
தரங்கக் கடலோழுந் தன்பெயரே யாகத் துரங்கப் பசுநாடித் தொட்டோன் -
வரங்கொள்
| 7 |
சுரநதி தன்பெய ராகச் சுருதி வரனதி சாபத்தை மாய்த்தோன் - தரணிபர்
| 8 |
மல்லன் மரபை ரகுவின் மரபென்று சொல்ல வுலகளித்த தொல்லையோன் -
செல்லலால்
| 9 |
வந்திரந்த வானவர்க்குத் தானவர்தம் போர்மாய இந்திரனை யேறாக்கி
யேறினான் - முந்தும்
| 10 |
ஒருதேரா லையிரண்டு தேரோட்டி யும்பர் வருதேரால் வான்பகையை
மாய்த்தோன் - பொருது
| 11 |
சிலையால் வழிபடு தெண்டிரையைப் பண்டு மலையால் வழிபட வைத்தோன் -
நிலையாமே
| 12 |
வாங்குந் திருக்கொற்ற வாளொன்றின் வாய்வாய்ப்பத் தூங்கும் புரிசை
துணிந்தகோன் - வீங்கு
| 13 |
குடகடற்குச் சார்பு குணகடலே யாக்கும் வடகடற்குந் தென்கடற்கு
மன்னன் - தரையின்
| 14 |
கரையெறிந்த பொன்னி கடலேழுங் கோப்ப வரையெறிந்த மன்னர்க்கு மன்னன் -
தரையின்
| 15 |
பெருமகளைத் தீவேட்ட பின்னருஞ் சேடன் திருமகளைக் கல்யாணஞ் செய்தோன்
- பரநிருபர்
| 16 |
கன்மலை மார்புங் கடவுள் வடமேருப் பொன்மலை மார்பும் புலிபொறித்தோன்
- சொன்மலைய
| 17 |
நல்லவன் பொய்கை களவழி நாற்பதுக்கு வில்லவன் காற்றளையை விட்டகோன் -
புல்லார்
| 18 |
தொழும்புடைய வாகத்துத் தொண்ணூறு மாறும் தழும்புடைய சண்டப்ர சண்டன்
- எழும்பகல்
| 19 |
ஈழ மெழுநூற்றுக் காதமுஞ் சென்றெறிந்து வேழந் திறைகொண்டு மீண்டகோன்
- சூழி
| 20 |
மதகயத்தா லீரொன் பதுசுரமு மட்டித் துதகையைத் தீத்த வுரவோன் -
முதுவானக்
| 21 |
கங்கையு நன்மதையுங் கௌதமியுங் காவிரியும் மங்கையுட னாடு மரபினோன்
- பொங்கி
| 22 |
அலைவீசி வேலை யனைத்தினும்போய்த் தெம்மீன் வலைவீசி வாரிய மன்னன் -
கொலையானை
| 23 |
பப்பத் தொருபசிப்பேய் பற்ற வொருபரணி கொப்பத் தொருகளிற்றாற்
கொண்டகோன் - ஒப்பொருவர்
| 24 |
பாட வரிய பரணி பசுடொன்றின் கூடல சங்கமத்துக் கொண்டகோன் - நாடும்
| 25 |
கலகமுஞ் சுங்கமுங் காய்கலியு மாற்றி உலகை முன்காத்த வுரவோன் -
பலவும்
| 26 |
தரணி யொருகவிகை தங்கக் கலிங்கப் பரணி புனைந்த பருதி - முரணில்
| 27 |
புரந்தர னேமி பொருவு மகில துரந்தரன் விக்கிரம சோழன் - பரந்தபனென்
| 28 |
றாய பெயர்கொண் டகிலாண் டமும்புரந்து சேய பெரிய திருக்குலத்து -
நாயகன்
| 29 |
சிற்றம் பலமுந் திருப்பெரும்பே ரம்பலமும் மற்றும் பலபல மண்டபமும்
- சுற்றிய
| 30 |
மாளிகையும் பீடிகையு மாடமுங் கோபுரமும் சூளிகையு மெத்தெருவுந்
தோரணமும் - ஆளுடையான்
| 31 |
கோயிற் றிருக்காமக் கோட்டமு மக்கோயில் வாயிற் றிருச்சுற்று
மாளிகையும் - தூயசெம்
| 32 |
பொன்னிற் குயிற்றிப் புறம்பிற் குறும்பனைத்தும் முன்னிற் கடலகழின்
மூழ்குவித்த - சென்னி
| 33 |
திருமகன் சீராச ராசன் கதிரோன் மருமக னாகி மறித்தும் -
திருநெடுமால்
| 34 |
ஆதிப் பிறவி யனைத்தினு மும்பர்க்குப் பாதிப் பகைதடிந்து பாதிக்கு
- மேதினியிற்
| 35 |
செந்தா மரையா டிருமார்பில் வீற்றிருக்க வந்தான் மனுவங்க்ச மாமேரு
- முந்தி
| 36 |
உடுத்த திகிரிப் பதினா லுலகும் அடுத்த வரராச ராசன் - அடற்றிகிரிக்
| 37 |
கண்ணன் கனகளபன் கண்டன் கதிரோனும் தண்ணென் கவிகைச் சனநாதன் -
எண்ணும்
| 38 |
தவன குலதிலகன் றன்பெருந் தேவி புவன முழுதுடைய பூவை - அவனியில்
| 39 |
எண்பெரு மாதிரத்து மேறு முடனாணைப் பெண்பெருமா ளந்தப்
புரப்பெருமாள் - மண்பரவ
| 40 |
ஓகை விளைக்கு முபய குலரத்னத் தோகை யுடனே துயிலெழுந் - தாகிய
| 41 |
மூர்த்தத் தனந்த முரசார்ப்பக் காவிரித் தீர்த்தத் தபிடேகஞ்
செய்தருளிப் - போர்த்திகிரி
| 42 |
மேலைக் குரவர்க்கும் விண்ணவர்க்கும் வேதியர்க்கும் காலைக் கடவ
கடன்கழித்து - மூலப்
| 43 |
பெரும்பே ரணிதம் பிதாமகன் காலை வரும்பே ரணியென்ன வாய்ப்ப -
நிரம்பப்
| 44 |
பவளச் சடையோன் பணித்த படியே தவளத்ரி புண்டரஞ் சாத்திக் -
குவளைப்பூங்
| 45 |
கார்க்கோல மாடியிற் காண்பான் மகன்காமன் போர்க்கோலங் காண்பானே
போற்கொண்டு - பார்த்திபர்தம்
| 46 |
தொல்லைத் திருமரபுக் கெல்லாந் தொழுகுலமாம் தில்லைதா திருநடனஞ்
சிந்தித்து - வல்லவர்
| 47 |
சூழச் சுருதி யனைத்துந் தொகுத்தெடுப்ப வேழப் பெருமானை மேல்கொண்டு
- வாழி
| 48 |
அரச வலம்புரி யார்ப்ப வதன்பின் முரசொரு மூன்று முழங்கத் -
திரையின்
| 49 |
சுடற்பொற் கவரி யெழப்பொங்கத் தொங்கற் கடவுட் கவிகை கவிப்ப -
புடவியின்
| 50 |
மீட்டுங் குறையவுணர் போர்கருதி விண்ணவர்கோன் தீட்டுங்
கொடிப்புலியாய்ச் சேவிப்ப - வாட்டானைத்
| 51 |
தென்னருஞ் சேரலருஞ் சிங்களருங் கொங்கணத்து மன்னரு மாளவரு மாகதரும்
- பின்னரும்
| 52 |
காந்தாரர் காலிங்கர் கௌசல ருள்ளிட்ட பூந்தார் நரபாலர் முன்போத -
வேந்தர்
| 53 |
பொருவாத பூபால கோபால னென்னும் திருநாம நின்று சிறந்த - வருநாளில்
| 54 |
தென்மாடக் கூடற் சிறைவிட்ட கார்புகார்ப் பொன்மாட வீதிப்
பொடியடக்கத் - தன்மீது
| 55 |
கன்மாரி பெய்யும் பிழையாற் கடவுளர்கோன் பொன்மாரி பெய்யும்
புயலேவப் - பின்னரும்
| 56 |
காமாரி சேயென்ற காக்கு மெழுவரினும் பூமாரி கௌமாரி முன்பொழிய -
யாமந்தீர்
| 57 |
காலை வெயிலொதுங்கக் கார்களாற் கார்களும்போய் மாலை வெயிலால்
மறித்தொதுங்கக் - கோலப் |
58 |
பெருங்குற் றுடைவாளப் பேரொளி மேரு மருங்கிற் பெரும்புலி மான -
நெருங்கிய
| 59 |
கோளி னொழுங்கு மழுங்கக் குலரத்ன ஒளி மகர வொளியெறிப்பத் - தோளில்
| 60 |
இருபொறை தீரு மிருபாப் பரசும் இருதொடி யாயகொல் லென்ன - வரரத்னம்
| 61 |
தாமே குயின்று தடங்கோளு நாளுஞ்சூழ் மாமேரு வென்ன முடிவயங்கப் -
பூமேற்
| 62 |
புடைநிலவுந் தங்கள் புகழ்நிலவின் மேலே குடைநிலவுஞ் சக்ரகிரி கோல -
உடையதன்
| 63 |
கைவைத் தருளாமே தாமே கடன்கழிக்கும் தெய்வப் படையைந்துஞ் சேவிப்பப்
- பெய்கணைத்
| 64 |
தூணிப் புறத்தோடுந் தோளிற் சிலையோடும் பூணித் தனங்கவேண் முன்போத -
மாணிக்கக்
| 65 |
கோவையான் முக்குவட்டுக் குன்றா யொருதிருப் பாவையாற் கொல்லிப்
பனிவரையாய் - ஓவாது
| 66 |
செய்ய தமிழ்முழங்கத் தெய்வப் பொதியிலாய் வெய்ய புலிமுழங்க
மேருவாய் - வையகஞ்சூழ்
| 67 |
கோர முடன்பொத நேமிப் பொலன்குன்றாய் வார்சுவரி யாலிமய மால்வரையாய்
- வேரி
| 68 |
விடுங்குழையார் சென்னி மிலைச்சிய சென்னி கொடுங்குழையார் வீதி
குறுக - நடுங்காமல்
| 69 |